சிபிச்செல்வன் கவிதைகள்
our network follows
you
சற்றுமுன் எழுதிய கவிதை
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது
திருவல்லிக்கேணியிலிருந்து
பதின்முன்றாம் எண் பேருந்தில் ஏறும்போது
மிகச்சரியாக இருந்தது
சற்றுமுன்வரை இருக்கையில் சாய்ந்திருந்தவனும் வாசித்தான்
அண்ணாசாலையில் நுழைந்தவுடன்
அலையடித்த குளமெனக் கலங்கியது கவிதை
ஜெமினி மேம்பாலத்தில் துப்பாக்கிகளுடன் காவலர்கள்
கண்காணிப்பதையறிந்த கவிதை ஒரு மாய
மந்திரவாதியைப்போல மறைந்தது.
அமெரிக்கன் துதரக வளாகத்தில் மஞ்சள் பூக்கள்
பூத்திருந்தன.அதை ரசிக்காமல் மாயமாய் மறைந்து போயிருந்தது அக்கவிதை.
எனக்கும் அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
துப்பாக்கியேந்திய காவலர்கள் சதா கண்காணித்தவாறேயிருக்கிறார்கள்
மிரண்டுபோன கவிதை இம்மாநகரில் ஏதாவதொரு பகுதியில்
நிம்மதியாகவும் இருக்கலாம்.
பதின்முன்றாம் எண் பேருந்தினுள் ஏறும்போது என்னை எச்சரித்தது கவிதை,,,,
கவிதையே,,,, கவிதையே,,,,,
சற்றுமுன் மாயமாய் மறைந்து போன கவிதையே
இன்னம் இம்மாநகர எல்லைக்குள்தான் இருக்கிறாயா–.
சீருடையணிந்த காவலர்களின் துப்பாக்கிகள் சுழல்கின்றன
முந்நுற்று அறுபது கோணங்களிலும்
ஜெமினி மேம்பாலத்திருந்த விளம்பர வாசகம்
உரக்கக் கூச்சலிடுகிறது
Wherever you go our network follows you